Wednesday, January 26, 2011

அன்னை

அன்னையே!
யார் வேண்டுமானாலும்
எனக்காக காத்திருப்பார்கள்....
ஆனால்
எனக்காக
பத்து மாதங்கள் காத்திருந்து..
உன் கருவரையில் சுமந்து...
எனக்கு ஆகாது என்பதற்காக
உனக்கு பிடித்தமான
உணவை தவிர்த்து
எனக்கு உயிர் கொடுத்து
நீ உயிர் வலியை அனுபவித்தாயே...
உலகத்தில் உள்ள அத்தனை
வார்த்தைகளாலும் உன்னை வர்ணித்து
அந்நியபடுத்த விரும்பவில்லை...
ஆனாலும் என் அன்னையே
உன்னை
கடவுளுக்கு மேலாக மதிக்கிறேன் ...
அன்பு = அன்னை